ADDED : செப் 07, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை :சென்னிமலை காப்புக்காடு பகுதியில் நடமாடும் சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் பல்வேறு முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, 12 வனத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து, சென்னிமலை வனப்பகுதியில் சிறப்பு ரோந்தில் நேற்று ஈடுபட்டனர். வனப்பகுதியில் தண்ணீர் தேங்கியுள்ள குட்டை, பாறை இடுக்கு, சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக சொல்லப்படும் அடர்ந்த வனப்பகுதிகளில் சிறப்பு ரோந்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.