ADDED : மே 27, 2026 04:20 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:சேலம் ரயில்வே கோட்ட சீனியர் ஆப்ரேடிங் மேலாளரின் தொழிலாளர் விரோத நடவடிக்கையை கண்டித்து, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில், ஸ்டேஷன் மேலாளர் அலுவலகம் முன், எஸ்.ஆர்.எம்.யு., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. யூனியன் கோட்ட உதவி செயலாளர் செந்தில் குமார் தலைமையில், 60 பேர் கலந்து கொண்டனர்.
பெரும்பாலான ஸ்டேஷன் மாஸ்டர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல் கண்மூடித்தனமாக வெளியிட்ட இடமாற்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும். குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் இல்லாத ஷன்டிங் மாஸ்டர்கள், பாயிண்ட் மேன்களை இடமாற்றம் செய்யக்கூடாது. ஷூ, ரெயின்கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை டிராபிக் தொழிலாளர்களுக்கு முறையாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை, ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
