ADDED : ஜூலை 20, 2025 05:22 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: அரசு சார்பில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்து வருகிறது. இதில் மாநகராட்சி மக்களுக்கு தேவையான விண்ணப்பங்களை வீடு வீடாக வினியோகம் செய்யும் பணி நேற்று நடந்தது.
துணை ஆணையர் தனலட்சுமி தலைமையிலான அதிகாரிகள், திண்டல் பகுதியில் வீடுகளுக்கு சென்று, கோரிக்கைகளை கேட்டறிந்து, அதற்கான விண்ணப்பத்தை வழங்கினர். இதன் மூலம், மக்கள் முகாம்களில் செலவிடும் நேரம் குறையவும், விண்ணப்பத்தை பொறுமையாக பூர்த்தி செய்து வழங்க முடியும் என தெரிவித்தனர்.
