ADDED : ஜூலை 12, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு, வில்லரசம்பட்டி, 4 ரோடு பகுதியில் வசிப்பவர் கருப்பையா மனைவி பழனியம்மாள். அதே பகுதியில் ேஹாட்டல் நடத்தி வருகின்றனர்.
இவர்களின், ௧௭ வயது மகள், கல்லுாரியில் முதலாமாண்டு பி.காம்., படித்து வருகிறார். கடந்த, 10ம் தேதி மாலை நசியனுாரில் கோவிலுக்கு சென்றவர், அதன் பிறகு வீடு திரும்பவில்லை. தாய் பழனியம்மாள் புகாரின்படி, வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.