நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை, நவ. 10-
பள்ளித்தேர்வில் மதிப்பெண் குறைந்ததை, தாய் கண்டித்ததால், மாணவன்
விபரீத முடிவை நாடினார்.
பெருந்துறையை அடுத்த சானடோரியம், ஐயப்பன் நகரை சேர்ந்த வடிவேல் மகன் தர்ஷன்குமார், 15; அரசுப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவன். சமீபத்தில் பள்ளியில் நடந்த தேர்வில் ஒரு பாடத்தில் மதிப்பெண் குறைவாக பெற்றதால், தாய் திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த மாணவன், வீட்டில் நேற்று துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.