ADDED : மார் 04, 2026 09:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்: அந்தியூர் அடுத்த கும்பரவாணி பழைய லைன் மாரியம்மன் கோவில் ஒட்டிய விவசாய நிலங்களில், ஒரு மாதமாக ஒற்றை ஆண் யானை புகுந்து, பயிர்களை சேதம் செய்து வருகிறது.
நேற்று முன்தினம் நள்ளிரவு குமார், தங்கராசு, பவளக்கொடி, முனுசாமி ஆகியோரின் தோட்டத்தில் புகுந்த யானை, வாழை மரங்களை முறித்தும், தின்றும் சேதப்படுத்தியது. தீப்பந்தம் மற்றும் பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டினர். 25 நாட்களுக்கும் மேலாக, இரவு நேரத்தில் யானையை விரட்டுவதே வேலையாக இருப்பதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

