ADDED : செப் 27, 2024 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: ஈரோடு, கொடுமுடியை சேர்ந்தவர் வெங்கடேசன், 50; சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக வேலை செய்து வந்தார். வீட்டில் நேற்றிரவு துாக்கு போட்டு கொண்டார். அருகிலிருந்தவர்கள் மீட்டு சத்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிந்தது. இது தொடர்பாக சத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். என்ன காரணத்துக்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது தெரியவில்லை.