ADDED : மே 02, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி:
கோபி அருகே அளுக்குளியை சேர்ந்த டெய்லர் பிரகாஷ்,38; இவர் ஸ்பிளென்டர் பைக்கில், சத்தி சாலையில் காசிபாளையம் பகுதியில் நேற்று மதியம் 3:00 மணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது கரட்டுப்பாளையத்தை
சேர்ந்த, கவியரசு, 21, ஓட்டி வந்த, அபே என்ற சரக்கு ஆட்டோ, பிரகாஷ் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த பிரகாஷ் சிகிச்சைக்காக, கோபி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.