ADDED : பிப் 16, 2025 03:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கருங்கல்பாளையம், ஜெயகோபால் வீதியை சேர்ந்தவர் அலாவுதீன், 31; ஈரோட்டில் உள்ள தனியார் பள்ளியில் தமிழ் ஆசிரியர். பிளஸ் 2 படிக்கும் 17 வயது மாணவனின் சமூக வலைதளத்துக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியும், தனிமையில் சந்-திக்குமாறும் அழைப்பு விடுத்து, பாலியல் தொந்தரவு செய்து வந்-துள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர், குழந்தைகள் நல குழுவின் தொலைபேசி எண் '1098'ல் புகாரளித்தனர். அவர்கள் இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசில் புகார் அளித்-தனர். விசாரணை நடத்திய போலீசார், போக்சோ வழக்குப்பதிந்து அலாவுதீனை கைது செய்தனர்.