sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள் மூன்று நாள் விடுப்பு எடுக்க தடை

/

ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள் மூன்று நாள் விடுப்பு எடுக்க தடை

ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள் மூன்று நாள் விடுப்பு எடுக்க தடை

ஈரோடு மாவட்டத்தில் ஆசிரியர்கள் மூன்று நாள் விடுப்பு எடுக்க தடை


ADDED : டிச 18, 2024 01:21 AM

Google News

ADDED : டிச 18, 2024 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 18-

அரசு பள்ளி ஆசிரியர்கள், இன்று முதல் 20 வரை மூன்று நாட்கள் விடுப்பு எடுக்கக் கூடாது என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

தமிழக முதல்வர் நாளை (19ல்) ஈரோடு வருகிறார். 20ல், ஈரோடு சோலாரில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதற்காக பல்வேறு துறை அமைச்சர்கள் வந்து சென்றபடி உள்ளனர். இந்நிலையில் பள்ளி கல்வித்துறை, தலைமை ஆசிரியர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

அமைச்சர்கள், அதிகாரிகள் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

எனவே இன்று, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் ஆசிரியர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது. காலை உணவு மேற்பார்வை செய்யும் ஆசிரியர்கள் காலை, 8:15 மணிக்குள் பள்ளிக்கு வந்து விட வேண்டும்.

பள்ளி கழிவறை சுத்தம், சுற்றுப்புற துாய்மையை கட்டாயம் பராமரிக்க வேண்டும். குறிப்பாக ஆணைக்கல்

பாளையம் பெரியார் நகர்,

லக்காபுரம், நகராட்சி நகர், கணபதிபாளையம் சாலையில் உள்ள பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மாணவர் படைப்புகளை காட்சிப்படுத்தி இருக்க வேண்டும்.

அனைத்து பதிவேடு களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆசிரியர்கள், 9:00 மணிக்குள்ளும், மாணவர்கள், 9:10 மணிக்குள்ளும் வருகை பதிவேடு முடிக்க வேண்டும்.

அனைத்து ஆசிரியர்களும் 19, 20ல் காலை 8:15 மணிக்குள் பள்ளிக்கு வர வேண்டும். விலையில்லா நல திட்டங்கள் குறித்து ஆசிரியர்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us