ADDED : நவ 29, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவில் பூசாரி
விபத்தில் பலி
காங்கேயம், நவ. 29-
திருப்பூர் மாவட்டம் முத்துாரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 63; கோவில் பூசாரி. நேற்று மதியம் சின்னமுத்துாரிலிருந்து முத்தூருக்கு சைக்கிளில் சென்றார்.
ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் செல்லும் அரசு பஸ், செங்கோடம்பாளையம் பிரிவு அருகே, சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த மோகன்ராஜை அக்கம்பக்கத்தினர் மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டது தெரிய வந்தது. வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.