ADDED : பிப் 07, 2026 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கொளப்பலுார் அருகே கும்மிக்கருக்கில் கருவலுார் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு பித்தளை தட்டு, பித்தளை சொம்பு, மணி ஆகிய பூஜை பொருட்கள், நேற்று முன்தினம் திருட்டு போனது.
இதுகுறித்து கோவில் நிர்வாகி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் களவாணியை தேடி வந்தனர். இது தொடர்பாக கோபி அருகே தட்டாம்புதுாரை சேர்ந்த கணேசன், 32, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்து, பூஜை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

