ADDED : ஆக 03, 2025 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி :பவானிசாகர் அணையில் இருந்து, கடந்த மாதம், 27ம் தேதி, 20 ஆயிரம் கன அடி, உபரிநீர் திறக்கப்பட்டது.இதனால் கோபி அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையில் அன்று முதல், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏழாம் நாளாக நேற்றும் தடை நீடித்த நிலையில், ஆடிப்பெருக்கு தினமான இன்றும் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து தற்போது அதிகரித்துள்ளது. எந்த நேரத்திலும் பவானி ஆற்றில் உபரிநீர் திறக்கும் வாய்ப்புள்ளது. இதனால் கொடிவேரி தடுப்பணைக்குள் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க முடியாது' என்றார்.