ADDED : டிச 13, 2024 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிறுமி விபரீத முடிவு
ஈரோடு, டிச. 13-
ஈரோடு, கருங்கல்பாளையம், கே.ஏ.எஸ். நகரை சேர்ந்த இம்ரான்கானின் மகள் ஷஹானா, 13; மதரசா பள்ளியில் ஹாஸ்டலில் தங்கி படித்தார். வார்டன் வேண்டுகோளால் கடந்த, ௧௦ம் தேதி மகளை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். அன்றிரவே வீட்டுக்குள் அறை கதவை தாழிட்டு, துாக்கு போட்டுக் கொண்டார். கதவை உடைத்து மகளை மீட்ட பெற்றோர், தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

