/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஐ.கே.எப்., கண்காட்சி இன்று துவங்குகிறது
/
ஐ.கே.எப்., கண்காட்சி இன்று துவங்குகிறது
ADDED : செப் 04, 2024 09:06 AM
திருப்பூர்: திருப்பூர் ஐ.கே.எப்., அசோசியேஷன், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், ஆயத்த ஆடை ஏற்று-மதி மேம்பாட்டு கழகம் சார்பில், 51வது ஐ.கே.எப்., கண்காட்சி இன்று துவங்கி, மூன்று நாட்கள் நடக்-கிறது. கண்காட்சியில், 'பருவநிலை மாற்றத்தில் இருந்து பூமியை பாதுகாப்போம்' என்ற தலைப்-புடன், பசுமை சார் உற்பத்தி ஆடைகள், துணி ரகங்கள் கண்காட்சியில் இடம் பெறுகின்றன.
தினமும், காலை 10:00 முதல், மாலை, 6:00 மணி வரை நடக்க உள்ளது. கண்காட்சியில், வெளி-நாட்டு வர்த்தகர்கள், வர்த்தக முகமைகள் பங்-கேற்கின்றன. திருப்பூர், கரூர் பகுதிகளை சேர்ந்த ஆயத்த ஆடை உற்பத்தியாளர், ஜவுளி உற்பத்தி-யாளர்கள் பங்கேற்கின்றனர். திருப்பூர் பின்ன-லாடை ஏற்றுமதியாளர்கள், பின்னலாடை தொழில்துறையினர் பங்கேற்று பயன்பெறலாம்.