ADDED : மே 07, 2026 05:35 AM
அ நிறம் | அளவு
பவானி, :சித்தோட்டை சேர்ந்த விஜயமணி, 80, மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவருக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் உள்ளனர். இவருக்கு மாதம்தோறும் வரும் முதியோர் உதவித் தொகையை வைத்து வாழ்ந்து வந்துள்ளார். இவரது மகன் பென்னாகரத்தில் இருந்து, மாதம் ஒரு முறை வந்து பார்த்து விட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து விட்டு செல்வார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் உரிமையாளர், விஜயமணி
யின் மகனுக்கு போன் செய்து உங்கள் தாய் இரண்டு மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியே வரவில்லை. உள்பக்கமாக பூட்டியிருப்பதாக கூறியுள்ளார். உடனே அவரது மகன் பென்னாகரத்தில் இருந்து வந்து, தாய் குடியிருக்கும் வீட்டிற்கு வந்து பார்த்த போது, படுக்கையில் இறந்தபடி உடல் அழுகி துர்நாற்றம் வீசியுள்ளது.
சித்தோடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
