ADDED : ஆக 06, 2025 12:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயம் அருகே பெருமாள்மலையில், நெடுஞ்சாலையோரம் அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் ஒரு தரப்பினர் கடந்த மாதம், ௩௧ம் தேதி விநாயகர் சிலை வைத்தனர். மற்றொரு தரப்பினர் எதிர்ப்பால் காங்கேயம் தாசில்தார் மோகனன் மற்றும் போலீசார் சென்று, சிலையை அகற்றி மாற்றிடத்தில் வைத்தனர்.
இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின்படி, அந்த விநாயகர் சிலை காங்கேயம் தாலுகா அலுவலகத்துக்கு நேற்று கொண்டு செல்லப்பட்டது. சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

