/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூன்று நாட்கள் நடக்கும் மாநில தடகள போட்டிகள் தொடக்கம்
/
மூன்று நாட்கள் நடக்கும் மாநில தடகள போட்டிகள் தொடக்கம்
மூன்று நாட்கள் நடக்கும் மாநில தடகள போட்டிகள் தொடக்கம்
மூன்று நாட்கள் நடக்கும் மாநில தடகள போட்டிகள் தொடக்கம்
ADDED : செப் 21, 2024 07:24 AM
ஈரோடு: மாநில அளவில் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி, ஈரோடு வ.உ.சி. பூங்கா மைதானத்தில் நேற்று தொடங்கியது. போட்டிகள், 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் நடந்தது. நீளம் தாண்-டுதல், உயரம் தாண்டுதல், பல்வேறு பிரிவுகளில் ஓட்டம், தொடர் ஓட்டம், தத்தி தாவுதல், வட்டு, ஈட்டி, குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இருந்து, 3,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலையில் பரிசளிப்பு விழா நடந்தது.
போட்டிகள் இன்று, நாளையும் நடக்கிறது. போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் மாணவ, -மாணவியர் தேசிய அள-விலான தடகள
போட்டியில் பங்கேற்பர்.