ADDED : பிப் 07, 2026 04:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தை அடுத்த சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச தேர் திருவிழாவை முன்னிட்டு, மூன்று நாட்கள் தேரோட்டம் நடந்தது.
இந்நிலையில் கோவில் அடிவாரத்தில் உள்ள நந்தவன தோட்ட தெப்பக்குளத்தில், பாரிவேட்டை தெப்போற்சவம் நேற்று காலை நடந்தது. முன்னதாக பாரிவேட்டை மண்டபத்துக்கு சுவாமி எழுந்தருளி, தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்தது.பிறகு தெப்பக்குளத்தில் உற்சவம் நடந்து, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு சுப்பிரமணிய சுவாமி திரும்பினார். வரும், 10ம் தேதி மதியம், 3:00 மணிக்கு சுவாமி மலைக்கு எழுந்தருளல், 5:00 மணிக்கு மலைக்கோவிலில் திருவிழா கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீர்த்துறை சேர்தல் நடக்கிறது.
இத்துடன் நடப்பாண்டு தைப்பூச தேர்த்திருவிழா நிறைவு பெறுகி-றது.

