sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழகத்தை ஹிந்தி நாடாக மாற்றி விடுவர்: நா.த.க.,வேட்பாளர் பேட்டி

/

தமிழகத்தை ஹிந்தி நாடாக மாற்றி விடுவர்: நா.த.க.,வேட்பாளர் பேட்டி

தமிழகத்தை ஹிந்தி நாடாக மாற்றி விடுவர்: நா.த.க.,வேட்பாளர் பேட்டி

தமிழகத்தை ஹிந்தி நாடாக மாற்றி விடுவர்: நா.த.க.,வேட்பாளர் பேட்டி


ADDED : ஜன 30, 2025 05:02 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ''தி.மு.க.,வுக்கு ஓட்டுப்பதிவு செய்தால், தமிழகத்தை ஹிந்தி நாடாக மாற்றி விடுவர்,'' என, நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், வடமாநிலத்தவர் வசிக்கும் பகுதியில், தி.மு.க., சார்பில் ஹிந்தியில் அச்சிட்ட துண்டு பிரசரங்களை வழங்கினர். அதை எடுத்து வந்து, நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி, நிருபர்களிடம் கூறியதாவது: தி.மு.க., சார்பில், தமிழ் மொழி இல்லாத மாற்று மொழியில் நோட்டீஸ் அச்சிட்டுள்ளனர். தாளமுத்து நடராஜன், கீழப்பழுவூர் சின்னசாமி, சத்தியமங்கலம் முத்து என மொழிக்காக உயிர் நீத்த பலர் மூலம் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது.

தமிழ் வாழ்க என பலகை மட்டும் வைக்கின்றனர். ஆனால், அவர்களது வேட்பாளரை மக்களிடம் கொண்டு செல்லும் துண்டு அறிக்கையில், தமிழ் இல்லை. தமிழர்-களை ஏமாற்றுகின்றனர். மக்களின் மொழிப்பற்றை நசுக்கும் வகையில், தமிழருக்கு துரோகம் செய்கின்றனர். தமிழர்கள், தமிழ் மொழி, மண் வளம் காக்கப்பட வேண்டும். தமிழ் சார்ந்த தொழில்கள், வணிகர்கள் உயர வேண்டும் என நாங்கள் பாடுபடு-கிறோம். எங்களுக்கு வாக்களிக்க தவறினால், ஹிந்தி நாடாக மாற்றி விடுவார்கள். அதற்கு சாட்சியாகத்தான் ஹிந்தியில் துண்டு அறிக்கை வெளியிட்ட தி.மு.க.,வின் முகத்தை மக்களிடம் காட்டு-கிறோம். இவ்வாறு கூறினார்.






      Dinamalar
      Follow us