ADDED : பிப் 06, 2026 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு பழையபாளையம் சங்கு நகரை சேர்ந்த ராஜா மகன் கோகுல், 22; பழையபாளையம் இந்து நகர் சுந்தரமூர்த்தி மகன் சீனிவாசன், 22; இருவரும் நேற்று முன் தினம் காலை, ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே ஒன்றரை கிலோ கஞ்சாவுடன் நின்றிருந்தனர்.
இருவரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்து, கஞ்சாவை கைப்பற்றினர். இதேபோல் ஈரோடு சாஸ்திரி நகர் விஜயா தியேட்டர் பின்புற பகுதி சரவணனிடம், 3,700 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

