ADDED : மார் 08, 2026 08:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர்:கர்நாடக
மாநிலம் கவுதள்ளியிலிருந்து ஈரோடு மார்க்கெட்டுக்கு தக்காளி
ஏற்றிய பிக்-அப் வேன் புறப்பட்டது. கவுதள்ளியை சேர்ந்த நாகராஜ், 42;
ஓட்டினார்.
அந்தியூரை அடுத்த வரட்டுப்பள்ளம் அணை அருகில் நேற்று
மதியம், 12:30 மணிக்கு வேன் வந்தது. அப்போது கர்நாடக மாநிலம்
ஹூப்ளியிலிருந்து ஈரோட்டுக்கு வெங்காய லோடு ஏற்றி வந்த ஈச்சர் வேன்
மோதியது. இதில் நாகராஜ், அவருடன் வந்த கவுள்ளி சக்திவேல், 28,
மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஈச்சர் வேன் டிரைவர் நவீன், 25,
காயமடைந்தனர். மூவரும் அந்-தியூர் அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து பர்கூர் போலீசார்
விசாரிக்கின்றனர்.

