ADDED : ஆக 23, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
செட்டிபாளையம் நேதாஜி நகர் விநாயகா கார்டனை சேர்ந்தவர் அசாருதீன்,
22; இவரை ஏழு பேர் கும்பல் தாக்கி, மொபைல்போன், டூவீலரை பறித்து
கொண்டனர்.
அசாரூதீன் தனக்கு தெரிந்த செட்டிபாளையம் விநாயகர் கோவில்
வீதி ராமசந்திரமூர்த்தியிடம், 22, தனது பைக், மொபைல்போனை வாங்கி
தரும்படி கேட்டுள்ளார். அந்த கும்பலிடம் கேட்டபோது அவரையும்
தாக்கியுள்ளனர். அசாருதீன் புகாரின்படி ஏழு பேர் மீது, தாலுகா
போலீசார் வழக்குப்பதிந்தனர். ஈரோடு கள்ளுக்கடை மேடு
ஜீவானந்தம் வீதி சிபிராஜ், 23; ஈரோடு புதுமை காலனி ரஞ்சித்குமார் (எ)
சியாம், 24; ஈரோடு வளையக்கார வீதி வி.வி.சி.ஆர்.நகர் மொட்டை கார்த்தி,
24, ஆகியோரை கைது செய்தனர். மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி
மாவட்ட சிறையில் அடைத்தனர்.
