/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அடையாளம் தெரியாத மூன்று பேர் மரணம்
/
அடையாளம் தெரியாத மூன்று பேர் மரணம்
ADDED : செப் 17, 2024 07:29 AM
ஈரோடு: ஈரோடு, வீரப்பன்சத்திரம், காவிரிரோட்டில், இரு தினங்களுக்கு முன், 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி கிடந்தார். பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்துவிட்டது தெரிந்தது.
இதேபோல் ஈரோடு வ.உ.சி., பூங்காவில், 50 வயது மதிக்கத்தக்க ஆண் மயங்கி கிடந்தார். ஈரோடு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இறந்தார். இவர்கள் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.* ஈரோடு அரசு மருத்துவமனை முன்புறம் கடந்த, 15ல் அடையாளம் தெரியாத, 60 வயது ஆண் மயங்கி கிடந்தார். போலீசார் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.