ADDED : மே 25, 2026 03:04 AM
அ நிறம் | அளவு
ஈரோடு;ஈரோடு மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த இடி, மின்னல் அடித்தது. மாநகரில் மழை கொட்டி தீர்த்தது.
ஈரோடு
மாவட்டத்தில் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில்
நேற்று மாலை மாநகரில் லேசான காற்று வீச துவங்கியது. பின்னர் பலத்த இடி,
மின்னல் அடித்தது. 2 மணி நேரத்துக்கு மேல் இந்நிலை நீடித்தது.
இந்நிலையில்
ஈரோடு மாநகர், கொடுமுடி, மொடக்குறிச்சியில் லேசான சாரல் மழை ஐந்து
நிமிடங்கள் நீடித்து நின்று போனது. கடம்பூரில் மிதமான மழை பெய்தது. இரவு,
8:40 மணியளவில் ஈரோடு மாநகரில் மழை கொட்ட துவங்கியது. இதனால் தாழ்வான
பகுதிகளில் மழை நீர் தேங்கியது. சாக்கடைகளில் மழை நீர் வெள்ளமென
பெருக்கெடுத்தது. குளிர் காற்று, மழையால் இதமான சூழல் நிலவியது.
