ADDED : அக் 08, 2024 03:46 AM
அ நிறம் | அளவு
தாராபுரம்: தாராபுரம் நகராட்சி பகுதியில், நேற்று மதியம் முதல் வானம் கருத்து, இறுக்கமான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில் மாலை, 4:30 மணியளவில், லேசான துாறலுடன் ஆரம்பித்த மழை, இடி மின்னலுடன் சேர்ந்து கனமழையாக உருவெடுத்தது. ஒரு மணி நேரம் அதே வேகத்தில் கொட்டித் தீர்த்தது. இதனால் பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவ, மாணவியர் அவதிப்பட்-டனர்.
