/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
/
எம்.சாண்ட் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்
ADDED : அக் 05, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், திருப்பூர் மாவட்ட கனிமம் தனி வருவாய் ஆய்வாளர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரி வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், காங்கேயம்-கரூர் ரோடு பகவதிபாளையம் பிரிவு பகுதியில் சோசதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியில், 8.5 யூனிட் எம்.சாண்ட் மணல் இருந்தது. நிறுத்தி சோதனை செய்ததில், உரிய அனுமதி பெறாமல் கடத்தி செல்வது தெரிய வந்தது.
லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் மீது, காங்கேயம் போலீசில் புகார் தந்தனர். லாரியை பறிமுதல் செய்து, காங்கேயம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.