/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மூங்கில் மரம் முறிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
/
மூங்கில் மரம் முறிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 10, 2024 07:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம் : கடம்பூரை அடுத்த அணைக்கரை, கோட்டமாளம் பகுதிகளில் நேற்று மதியம் பரவலாக, பலத்த காற்றுடன் மிதமாக மழை பெய்தது.
காற்றை தாக்குப்பிடிக்க முடியாமல் அணைக்கரை அருகே பள்ளத்தின் அருகில், சாலையோர மூங்கில் மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. வனத்துறையினர் மூங்கில் மரத்தை வெட்டி அப்புறப்படுத்திய பிறரு, போக்குவரத்து சீரானது. இதனால் சாலையில், 2:௩0 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.