ADDED : செப் 03, 2026 05:42 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
சோலார் இரணியன் வீதியை சேர்ந்தவர் கார்த்திகேயன், 46, ஈரோடு ரயில்வே
டிரைவர். கடந்த 1ம் தேதி அதிகாலை, 5:30 மணிக்கு வேலைக்கு சென்றார்.
மதியம், 2:10 மணிக்கு வீட்டுக்கு சென்றார். மனைவி மேரி ஜான்சியிடம் பேசி
கொண்டிருந்தார்.
அப்போது திடீரென கார்த்திகேயன் மயங்கி
விழுந்தார். ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனைக்கு அழைத்து
செல்லப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக, ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த
டாக்டர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தாலுகா
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
