ADDED : பிப் 26, 2026 04:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோட்டில், மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் 'பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்' திட்டத்தில், உள்ளக மற்றும் உள்ளூர் குழு உறுப்பினர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நடந்தது.
பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு எதிரான பாதுகாப்பு சட்டம்-2013 குறித்தும், உள்-ளக குழு எவ்வாறு அமைக்க வேண்டும், புகார் மனு வரப்-பெற்றால் எவ்வாறு கையாள்வது, விசாரிப்பது, கல்லுாரி, தனியார் நிறுவனங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் மற்றும் பணியி-டங்களில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பது குறித்தும், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முகவடிவு, வக்கீல் தேன்மொழி விளக்கம் அளித்தனர். அரசு, தனியார் நிறுவனங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் கல்லுாரி, வணிக நிறுவனத்தினர் பங்கேற்றனர்.

