ADDED : ஆக 07, 2024 06:52 AM
அ நிறம் | அளவு
கோபி: பாரதீய அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஈரோடு மண்டலம் சார்பில், பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி, கோபியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பூபதி தலைமை வகித்தார். போக்குவரத்து பணியாளர்களை அரசு ஊழியராக்க வேண்டும். தனியார் மயமாக்கும் அரசின் முயற்சியை கைவிட வேண்டும். சுழற்சி முறையில் பணி ஒதுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
