/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது
/
ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த இருவர் கைது
ADDED : அக் 03, 2024 07:30 AM
டி.என்.பாளையம்: -டி.என்.பாளையம் அடுத்த, காளியூர்- செல்லிபா-ளையம் ஒத்தக்குதிரை தோட்டம் பகுதியில், கிராம நிர்வாக அலுவலர் சுந்தரி மற்றும் உதவி-யாளருடன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்-தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த சிவசுப்பிரம-ணியம், 50, என்பவரது விவசாய பூமியில் டி.ஜி.புதுார் நால்ரோடு பகுதியை சேர்ந்த பூபதி, 30, என்பவர் டிராக்டர் கம்ப்ரஷர் மூலமாக துளை-யிட்டு கொண்டு இருந்து உள்ளனர்.
இது குறித்து வருவாய்த்துறையினர் விசாரித்த போது, டிராக்டர் கம்ப்ரஷர் மூலமாக துளை-யிட்டு, வெடி வைத்து ஆழப் படுத்தி நீர்த்தேக்க தொட்டி அமைக்க இருப்பதாக தெரியவந்தது. மேலும், டிராக்டர் கம்ப்ரஷர் வாகனம் மூலம், நான்கு அடி ஆழம் துளையிட்டு இருந்ததும், ஊத்-துக்குளி செல்வநாயகி அம்மன் என்ற பெயரில் எக்ஸ்ப்போஷிவ் குடோன் வைத்திருக்கும் திரு-நாவுக்கரசு என்பவர் மூலம், 100 எண்ணிக்கை கொண்ட ஜெலட்டின் குச்சி பயன்படுத்த வைத்தி-ருந்தது தெரியவந்தது.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள ஓட்டக்குட்டை சாலை அருகில், அனுமதியின்றி பாறைகளை துளையிட்டு, வெடிக்க கூடிய ஜெலட்டின் குச்சி-களை வைத்திருந்ததாக கிராம நிர்வாக அலுவ-லரின் புகார்படி, பங்களாப்புதுார் போலீசார் ஜெலட்டின் குச்சிகளை பறிமுதல் செய்து, சிவ-சுப்பிரமணியம், பூபதி ஆகியோரை கைது செய்-தனர்.

