ADDED : டிச 11, 2025 06:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: விஜயமங்கலம் கள்ளியம்புதுாரில் வசிப்பவர் அடியர் ரஹ்மான் காசி, 31. இவரது சொந்த ஊர் மேற்கு வங்கம். கடந்த 9ல் கள்ளி-யம்புதுார் டாஸ்மாக் கடை அருகே, விற்பனை செய்வதற்காக 2.200 கிலோ கஞ்சாவை வைத்திருந்தது தெரியவந்தது. ஈரோடு மதுவிலக்கு போலீசார் கஞ்சாவை கைப்பற்றி, காசியை கைது செய்தனர்.
* அரச்சலுாரை அடுத்த கோபாளிபாறை அருகே நேற்று முன்-தினம், 150 கிராம் கஞ்சா வைத்திருந்த சென்னிமலை மேலபா-ளையத்தை சேர்ந்த சரவணன் மகன் பிரவீன், 22, என்பவரை அரச்-சலுார் போலீசார் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

