ADDED : ஆக 01, 2026 06:31 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
செங்குந்தபுரம் விநாயகர் கோவில் வீதி பகுதியில் போதை மாத்திரை
விற்பனை செய்வதாக, சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் ரோந்து சென்றபோது, செங்குந்தபுரத்தை சேர்ந்த
கார்த்தி, 23; கங்காபுரம் நீலிக்கரை கமலேஷ், 26, ஆகியோரிடம் சோதனை
செய்தபோது, வலி நிவாரண மாத்திரைகளை போதை மாத்திரைகளாக விற்பனை
செய்ய பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்து,
100 மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.
