/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபைல் போனை பறித்த இருவருக்கு சிறை
/
மொபைல் போனை பறித்த இருவருக்கு சிறை
ADDED : பிப் 02, 2026 06:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி வலசு திரு.வி.க.வீதியில், ஹோட்டல் உள்ளது. இதன் உரிமையாளர் சங்கர், 39; சூரம்பட்டி வலசு வணிக வளாகம் அருகே நின்றபடி, மொபைல்போனில் நேற்று முன் தினம் பேசி கொண்டிருந்தார்.
அப்போது டூவீலரில் வந்த இருவர் பேச்சு கொடுத்து, அவரது மொபைல் போனை பறித்து தப்பினர். சங்கர் புகார்படி சூரம்-பட்டி போலீசார் தேடி வந்தனர்.இதில் அந்தியூர் புன்னம் முத்துகுமார் மகன் சுதன், 24; ஈரோடு மாணிக்கம் பாளையம் சண்-முகசுந்தரம் மகன் மோனீஸ்வரன், 24, ஆகியோர் மொபைல்போனை பறித்தது தெரியவந்தது. இரு-வரையும் போலீசார் கைது செய்து, மொபைல்-போனை பறிமுதல் செய்தனர். நீதிமன்ற உத்தர-வுப்படி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

