/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போலீஸ் என மிரட்டிய இரண்டு பேர் கைது
/
போலீஸ் என மிரட்டிய இரண்டு பேர் கைது
ADDED : செப் 24, 2024 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கட்டபொம்மன் வீதி, அலாவுதீன் மகன் சதாம் உசேன், 23; டூவீலரில் பழையபாளையத்துக்கு சென்றபோது, இரு நபர்கள் வழிமறித்தனர். போலீஸ் என்று கூறி ஹெல்மெட் போடாமல் சென்றதற்கு மிரட்டி பணம் கேட்டனர். சந்தேகமடைந்து சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார்.
விசாரித்த போலீசார், மதுரை, மேலவளவு கருப்பைய்யா மகன் தினகரன், 38, தமிழரசன் மகன் மச்சராஜா, 36, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு போலீஸ் அடையாள அட்டையை கைப்பற்றினர்.
இருவர் மீதும் மதுரையில் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

