sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இருசக்கர வாகன மோசடிஇளைஞர் அதிரடி கைது

/

இருசக்கர வாகன மோசடிஇளைஞர் அதிரடி கைது

இருசக்கர வாகன மோசடிஇளைஞர் அதிரடி கைது

இருசக்கர வாகன மோசடிஇளைஞர் அதிரடி கைது


ADDED : ஏப் 19, 2025 01:53 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்:கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி பகுதி முருகன் என்பவரது மகன் சேட்டு என்ற சிவா, 27. இவர் தற்போது சேலம் மாவட்டம், முத்துநாயக்கன்பட்டி மூலக்கடையில் வசித்து வருகிறார். பல ஆண்டுகளாக, இரு சக்கர வாகனங்களை வாகன உரிமையாளர்களிடம் வாங்குவது போல் சென்று, அதை திருடி சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை சேர்ந்த நபர் ஒருவர், கடந்த வாரம் முகநாலில் தனது இருசக்கர வாகனத்தை விற்பதாக செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இதனை பார்த்த சிவா, வாகனத்தை வாங்குவதற்கு காங்கேயம் வந்துள்ளார் பின்பு வாகன உரிமையாளரிடம் வாகனத்தை ஓட்டி பார்க்க வேண்டும் என்று கூறி, வாகனத்தை அங்கிருந்து திருடி சென்றுள்ளார். வாகன உரிமையாளர் புகார்படி, காங்கேயம் போலீசார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் வாகனம் சென்ற சாலையில் உள்ள, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், கையும் களவுமாக சிக்கிய சிவாவை பிடித்து, அவரிடமிருந்து நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இதையடுத்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us