/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இரு வாலிபர்கள்மீது போக்சோவில் வழக்கு
/
இரு வாலிபர்கள்மீது போக்சோவில் வழக்கு
ADDED : செப் 04, 2025 01:51 AM
ஈரோடு, சத்தியமங்கலத்தில், இரு வாலிபர்கள் மீது மகளிர் போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்தனர்.
சத்தியமங்கலம் மேட்டுக்கடை மரகலுார் மனோகரன் மகன் லோகித், 21, கட்டட தொழிலாளி. கோபியை சேர்ந்த, 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை காட்டி திருமணம் செய்து, பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி இரண்டு மாதம் கர்ப்பமானார். மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்ற போது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து சிறுமி அளித்த புகார்படி, லோகித் மீது குழந்தை திருமண தடை சட்டம் மற்றும் போக்சோ பிரிவுகளின் கீழ், சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்தனர்.
* சத்தியமங்கலம், புது வடவள்ளி அரிஜன காலனியை சேர்ந்தவர் முருகன், 28. இவர், சத்தியை சேர்ந்த, 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமி அளித்த புகார்படி, சத்தியமங்கலம் அனைத்து மகளிர் போலீசார், முருகன் மீது போக்சோவில்
வழக்குப்பதிவு செய்தனர்.