ADDED : ஏப் 02, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
தாராபுரம், தாராபுரம் அருகே, உரிய ஆவணங்கள் இன்றி, காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ. 90 ஆயிரத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தாராபுரத்தை அடுத்த பூளவாடி ரோட்டில், சிவக்குமார் தலைமையிலான பறக்கும் படையினர், நேற்று மதியம் 2:00 மணியளவில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே தாராபுரத்தில் இருந்து, திம்மநாயக்கன்பாளையம் நோக்கி, யுவராஜ் என்பவர் ஓட்டிச் சென்ற காரை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்கள் இன்றி, 90 ஆயிரம் ரூபாய் கொண்டு சென்றது தெரிந்தது. இதையடுத்து, பறக்கும் படையினர், அந்த பணத்தை பறிமுதல் செய்து, வருவாய்த்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின், அந்த தொகை அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
