/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தடையில்லா இணையசேவை 'டேன்பி நெட்' அழைப்பு
/
தடையில்லா இணையசேவை 'டேன்பி நெட்' அழைப்பு
ADDED : ஜன 02, 2026 04:42 AM
ஈரோடு: தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலைய-மைப்பு நிறுவனம் (டேன்பிநெட்), கிராமப்புறங்களில் உயர்தர இணைய சேவை வழங்கும் நோக்கில், மாவட்ட அளவில் தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இருவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒருவர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு விண்ணப்பிக்கலாம். tanfinet.tn.gov.inல் ஆவ-ணங்களை பதிவிறக்கம் செய்து, உரிய ஆவணங்களுடன் பதி-வேற்றம் செய்து, துணை பிரிவை தேர்வு செய்து விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு துணை பிரிவுக்கும் தலா, 25,000 ரூபாய் திரும்ப பெறக்கூடிய வட்டியில்லா வைப்பு தொகை செலுத்த வேண்டும். விண்ணப்பத்தை வரும், 14ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

