ADDED : செப் 27, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வி.சி., தெருமுனை பிரசாரம்
ஈரோடு, செப். 27-
விடுதலை சிறுத்தைகள் கட்சி, இளஞ்சிறுத்தைகள் எழுச்சி பாசறை சார்பில், ஈரோடு மரப்பாலம் நால்ரோட்டில் தெருமுனை பிரசார கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட அமைப்பாளர் தனவிஜயன் தலைமை வகித்தார். மண்டல துணை செயலாளர் ஜாபர் அலி முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளராக மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் பங்கேற்றார். உளுந்துார்பேட்டையில் அக்.,௨ல் நடக்கும் மது, போதை பொருட்கள் ஒழிப்பு மாநாடு குறித்து பேசினார். திருநகர் காலனி, பி.பெ.அக்ரஹாரம் பகுதியிலும் தெருமுனை பிரசார கூட்டம் நடைபெற்றது. மாநகர செயலாளர் அம்ஜத்கான், மகளிரணி மாநகர செயலாளர் சித்ரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

