ADDED : செப் 03, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம், தாராபுரத்தில் உடுமலை ரோட்டில் உள்ள, நகராட்சி காய்கறி மார்க்கெட் கட்டடத்தை இடித்து விட்டு, 2 கோடி ரூபாய் மதிப்பில், புதிய காய்கறி மார்க்கெட் வளாகம் கட்டும் பணி நடந்தது.
பணி நிறைவடைந்த நிலையில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர், காய்கறி மார்க்கெட் வளாகத்தை நேற்று திறந்து வைத்தனர். நிகழ்வில் நகர் மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகராட்சி ஆணையர் முஸ்தபா மற்றும் தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.