ADDED : ஜூன் 22, 2025 01:18 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை, மதுரையில் இன்று நடக்கும் முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் தலைவர் மோகனப்பிரியா சரவணன் தலைமையில், சென்னிமலை முருகன் கோவிலில் வேல் வைத்து நேற்று வழிபாடு செய்யப்பட்டது.
இந்த வேல் மதுரையில் நடக்கும் மாநாட்டுக்கு எடுத்து செல்லப்படும் என்று தெரிவித்தனர். நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
