sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் வேளாங்கண்ணி மாதா தேர் பவனி

/

ஈரோட்டில் வேளாங்கண்ணி மாதா தேர் பவனி

ஈரோட்டில் வேளாங்கண்ணி மாதா தேர் பவனி

ஈரோட்டில் வேளாங்கண்ணி மாதா தேர் பவனி


ADDED : செப் 09, 2024 06:37 AM

Google News

ADDED : செப் 09, 2024 06:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியாள் பிறந்த நாள், ஆண்டுதோறும் செப்., 8ம் தேதி கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் வேளாங்கண்ணி மாதா திருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி, ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் மாதாவின் பிறப்பு திருவிழா, ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ராயப்பன் தலைமையில் நேற்று கொண்டாடப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம், அஞ்சுக்கோட்டை ஆலய பங்குத்தந்தை கஸ்பார் பங்கேற்று, திருப்பலி நிறைவேற்றினார். மாதாவின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில், கேக் வெட்டப்பட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது. தொடர்ந்து வேளாங்கண்ணி மாதா வேண்டுதல் தேர்பவனி நடந்தது. பக்தர்கள் வேளாங்கண்ணி மாதா சொரூபத்தை தோளில் சுமந்து, ஆலயத்தை மூன்று முறை வலம் வந்தனர். உதவி பங்குத்தந்தை லுார்து அமிர்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us