ADDED : மார் 08, 2026 08:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
அருகே வாசவி கல்லூரி பின்புறம் பகுதியை சேர்ந்தவர் பாலன், 55;
பெருமாள்மலை அருகில் ஒரு துணிக்கடையில் காவலாளியாக பணிபுரிந்தார்.
மது பழக்கத்துக்கு அடிமையா-னவர்.
கடந்த, 5ம் தேதி மது போதையில்
வீட்டுக்கு சென்றவர், மனைவி சாந்தியிடம் தகராறு செய்து விட்டு வெளியே
சென்-றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் முனியப்பன் கோவில் அருகே
காலிங்கராயன் வாய்க்காலில் நேற்று முன் தினம் காலை சடலமாக மிதந்தார்.
கருங்கல்பாளையம் போலீசார் மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.

