ADDED : ஏப் 27, 2024 06:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாநகராட்சி சார்பில், வெயில் தாக்கத்தில் வாடித் தவிக்கும் மக்களுக்கு, அரசு மருத்துவமனை ரவுண்டானா பகுதி, நேதாஜி சாலையில் நீர்-மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
மக்கள் அதிகளவில் கூடும் மத்திய பஸ் ஸ்டாண்ட், காய்கறி மார்க்கெட், மணிக்கூண்டு, மாநகராட்சி மண்டல அலுவலகம் முன்பும் நீர்-மோர் பந்தல் அமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.* கோபி பஸ் ஸ்டாண்ட் எதிரே, அ.தி.மு.க., சார்பில் நீர் மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. எம்.எல்.ஏ., செங்கோட்டையன் பந்தலை திறந்து வைத்தார். ஏராளமான மக்கள் நீர்மோரை ஆர்வமாக விரும்பி வாங்கி பருகினர். இதனால் சில மணி நேரத்தில், அனைத்து நீர்மோரும் காலியானது.

