/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரதான குழாய் உடைப்பால் குடிநீர் வீண்
/
பிரதான குழாய் உடைப்பால் குடிநீர் வீண்
ADDED : டிச 13, 2024 01:06 AM
புன்செய் புளியம்பட்டி, டிச. 13-
புன்செய்புளியம்பட்டி நகராட்சி பகுதி மக்களுக்கு, பவானிசாகர் அணையிலிருந்து, இரண்டு குடிநீர் திட்டங்கள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதற்காக, 16 கி.மீ., துாரத்துக்கு மாநில நெடுஞ்சாலை வழியாக பிரதான குழாய் அமைக்கப்பட்டுள்ளது. முதலாம் குடிநீர் திட்ட குழாய் பதித்து, 40 ஆண்டுகளுக்கும் மேலாவதால், அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்படுகிறது. பவானிசாகர்--புன்செய் புளியம்பட்டி சாலை, புதுப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு நேற்று காலை தண்ணீர் வீணாக ஓடி, சாலையோரம் குளம்போல் தேங்கியது.
இதுகுறித்து மக்கள் கூறியதாவது: நகராட்சியில் ஐந்து நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் வருகிறது. இந்நிலையில் பிரதான குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால், போதிய குடிநீர் கிடைப்பதில்லை. நகராட்சியில் மற்ற திட்டப்பணிகளை விட குடிநீர் பராமரிப்புக்கே அதிக நிதி செலவிடப்படுகிறது. தரமில்லாத குழாய்கள் அமைப்பதே இதற்கு காரணம். இவ்வாறு
கூறினர்.

