ADDED : செப் 12, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர், பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. துவக்கத்தில், 950 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், படிப்படியாக குறைக்கப்பட்டு, 750 கன அடியாக நேற்று குறைக்கப்
பட்டது.
அதேசமயம் கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி நீர், குடிநீர் தேவைக்கு 100 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்று, 936 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 100.73 அடி; நீர் இருப்பு, 29.3 டி.எம்.சி.யாக இருந்தது.