/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஓடையை சுத்தம் செய்ய தயக்கம்: நீர்வளத்துறை மீது குற்றச்சாட்டு
/
ஓடையை சுத்தம் செய்ய தயக்கம்: நீர்வளத்துறை மீது குற்றச்சாட்டு
ஓடையை சுத்தம் செய்ய தயக்கம்: நீர்வளத்துறை மீது குற்றச்சாட்டு
ஓடையை சுத்தம் செய்ய தயக்கம்: நீர்வளத்துறை மீது குற்றச்சாட்டு
UPDATED : டிச 15, 2025 01:20 PM
ADDED : டிச 15, 2025 06:24 AM

அந்தியூர்: அந்தியூரில் ஓடையை துார்வார பலமுறை கூறியும், நீர்வளத்துறை மெத்தன போக்குடன் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அந்தியூரிலிருந்து தவிட்டுப்பாளையம் செல்லும் வழியில், இணைப்பு பாலம் கட்டப்பட்-டுள்ளது. இப்பாலத்தின் அடிப்பகுதியில், புதுக்காடு செல்லும் ரோட்டிலிருந்து, தவிட்டுப்பாளையம் மயானம் வழியாக செல்லும் ஓடை உள்ளது. இரண்டு கிலோ மீட்டர் துாரத்துக்கு, ஓடையில் நாணல் தண்டு, புல், பூண்டு முளைத்துள்ளது. மேலும் தவிட்டுப்பாளையம் வீடுகளின் கழிவு-நீரும் ஓடையில் தான் கலக்கிறது. ஓடையில் புதர் மண்டி கிடப்பதால், கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கொசு உற்பத்தி கேந்திரமாக மாறியுள்ளது. குறிப்-பாக அந்தியூர்-தவிட்டுப்பாளையம் இணைப்பு பாலத்தின் இருமருங்கிலும் கழிவுநீரால் துர்-நாற்றம் வீசுகிறது. இதனால் ஓடையை துார் வார, நீர்வளத்துறையினருக்கு மனு வழங்கியும் கண்டு கொள்ளவில்லை என புகார் எழுந்துள்ளது.இதுகுறித்து அந்தியூர் பேரூராட்சி, 12வது வார்டு கவுன்சிலர் பொன்னுப்பையன் கூறியதாவது: இணைப்பு பாலத்தின் அடியில் உள்ள ஓடையில் சாக்கடை தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசுவ-துடன், கொசு உற்பத்தி அதிகரித்துள்ளது. ஓடையை துார்வார நீர்வளத்துறை அலுவல-கத்தில் மனு வழங்கி ஒரு மாத்துக்கும் மேலா-கியும் நடவடிக்கை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்

