ADDED : மார் 08, 2026 08:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானிசாகர்:பவானிசாகர்
அணையில் இருந்து, கீழ்பவானி வாய்க்கால் மற்றும்
அரக்கன்கோட்டை-தடப்பள்ளி பாசனத்துக்கு தண்ணீர்
திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரக்கன்கோட்டை-தடப்-பள்ளி
பாசனத்துக்கு திறக்கப்பட்டிருந்த, 600 கன அடி நீர் நேற்று
முற்றிலும் நிறுத்தப்பட்டது.
அதேசமயம் கீழ்பவானி வாய்க்கால்
பாசனத்துக்கு, 2,300 கன அடி தண்ணீர், காளிங்கராயன் பாசனத்துக்கு, 300
கன அடி நீர்; குடிநீர் தேவைக்காக, 100 கன அடி நீர் என, 2,700 கன அடி
தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நேற்றைய நிலவரப்படி அணை
நீர்மட்டம், 81.69 அடி; நீர் இருப்பு, 16.5 டி.எம்.சி.,யாக இருந்தது. அணை
நீர்வரத்து, 43 கன அடியாக இருந்தது.

